உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர் திருமூர்த்தி குடும்பத்தில் ஒருவருக்கு அரசுபணி வழங்க உத்தரவு
ஜம்மு காஷ்மீரில் கடந்த 24-ம் தேதி திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமூர்த்தி என்ற பாதுகாப்புப் படை வீரர் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது துப்பாக்கி வெடித்த்தில் குண்டு தவறுதலாக அவர் முகத்தில் குண்டு பாய்ந்தது.
இதையடுத்து, சம்பா மாவட்ட ராணுவ மருத்துவமனையில் திருமூர்த்தி அனுமதிக்கப்பட்டு துப்பாக்கி குண்டு நீக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக கூறப்பட்டது. பின்னர், சிகிச்சை பலனின்றி திருமூர்த்தி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர் திருமூர்த்தி குடும்பத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் திருமூர்த்தி குடும்பத்தில் ஒருவருக்கு அரசுபணி வழங்க உத்தரவிட்டார்.