அரசு பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து..! 3 பெண்கள் உயிரிழப்பு..!

சிவகங்கை அருகே அரசு பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் அருகே திருமாஞ்சோலை அருகே அரசு பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சிவகங்கையில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த மோதலில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 3 பெண்கள் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment