ஒடிசா: ஆற்றில் கவிழ்ந்த சரக்கு ரயில்..!

ஒடிசா மாநிலத்தில் சரக்கு ரயில் திடீரென அதன் தடம் புரண்டு ஆற்றில் கவிழ்ந்து விழுந்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் கோதுமை ஏற்றி சென்ற சரக்கு ரயில் ஒன்று ஆற்றில் தடம் புரண்டு விழுந்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள தெற்கு ரயில்வே, இன்று அதிகாலை ஒடிசாவில் உள்ள அங்குல் மற்றும் தல்செர் இடையேயான வழித்தடத்தில் சரக்கு ரயில் ஆற்றில் கவிழ்ந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

இந்த சரக்கு ரயில் விபத்தில் இதன் 9 பெட்டிகள் ஆற்றில் விழுந்துள்ளது.  மேலும், அதிர்ஷ்டவசமாக ரயிலின் ஓட்டுநர் மற்றும் அதில் இருந்த பணியாளர்கள் அதிலிருந்து உயிர் தப்பியுள்ளனர். இதனை அடுத்து சம்பல்பூர் திசை மற்றும் குர்தா சாலை திசையில் இருந்து விபத்து நிவாரண ரயில் விரைந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.