மாணவர்களுக்கு குட் நியூஸ்…8 ஆம் வகுப்பு வரை ‘ஆல் பாஸ்’…அரசு அறிவிப்பு.!!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு கடந்த 11-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடந்தது. இந்நிலையில், தற்போது புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1 முதல் 8 -ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும்  தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

9-ஆம் வகுப்பு வகுப்பு மாணவர்கள் 35% மதிப்பெண் பெற்று இருந்ததால் தேர்ச்சி எனவும் 1 முதல் 9-ஆம் வகுப்புக்கான தேர்ச்சி பட்டியலை கல்வித்துறைக்கு மே 8-ம் தேதிக்குள் அனைத்து பள்ளி முதல்வர்களும் அனுப்ப வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், (ஏப்.20) முதல்  புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கோடை விடுமுறை தொடங்கப்பட்டுள்ளது.  மே மாதம் 31-ம் தேதி வரை கோடை விடுமுறை ஜூன் 1-ம் தேதி மீண்டும் பள்ளிகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment