டெல்லியில் ஐபிஎல் போட்டியை நேரில் கண்டு ரசித்த ஆப்பிள் சிஇஓ.!

டெல்லியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. இந்த போட்டியில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியை பார்ப்பதற்கு ஆப்பிள் சிஇஓ டிம் குக் வருகை தந்திருந்தார். 

delhi capitals vs kolkata knight riders 2023

அவர், பாலிவுட் நடிகை சோனம் கபூர் அஹுஜா, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மற்றும் பலருடன் சேர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைப் பார்த்தார். ஆப்பிள் சிஇஓ டிம் குக் கடைசியாக கடந்த 2016 -ஆம் ஆண்டு தான் சுக்லாவுடன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்த்திருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் போட்டியை பார்ப்பதற்கு நேரில் வருகை தந்துள்ளார்.  இது தொடர்பான புகைப்படத்தை சோனம் கபூர்  தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ” டிம் குக் மற்றும் ஆப்பிள் குழு முழுவதும் – நீங்கள் இங்கே ஒரு அழகான தங்கியிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.  நீங்கள் அளித்த அக்கறை மற்றும் கவனத்திற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.

அதற்கு நன்றி தெரிவித்துள்ள டிம் குக் டிவிட்டரில் ” மறக்க முடியாத ஒரு மாலைப்பொழுதை தந்தமைக்கு மிக்க நன்றி” என பதிவிட்டுள்ளார். மேலும், நேற்று முன்தினம் இந்தியாவில் உலக புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம் தனது முதல் நேரடி விற்பனை நிலையத்தை மும்பையில் தொடங்கியது. இதனை ஆப்பிள் சிஇஓ டிம் குக் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment