முதல்வருக்கு நல்லாசிகள்.. தருமபுர ஆதீனம் பேட்டி!

ஆரம்பத்தில் கூறியது போல ஆன்மீக அரசியலுக்கு இது ஒரு உதாரணம் தருமபுர ஆதீனம் பேட்டி.

ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடக்கத்தில் ராஜராஜ சோழனின் ஐப்பசி சதய விழா தஞ்சை பெரிய கோயிலில் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டும் கோலகமலாக நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தஞ்சாவூரிலுள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

முதல்வரின் அறிவிப்பிற்கு பலரும் வரவேற்று வருகின்றனர். இந்த நிலையில், தஞ்சையில் ராஜராஜ சோழனின் உருவ சிலைக்கு மாலை அணிவித்த பின் பேட்டியளித்த தருமபுர ஆதீனம், ராஜராஜ சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக நடத்துவோம் என அறிவித்த முதல்வருக்கு நல்லாசிகள், ஆரம்பத்தில் கூறியது போல ஆன்மீக அரசியலுக்கு இது ஒரு உதாரணம் என தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment