இரண்டாம் நாளாக உயர்ந்த தங்கம் விலை.! இன்றயை நிலவரம் என்ன?

இன்றைய தங்கம் வெள்ளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு.

எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு. இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம்,வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது.

அந்த வகையில், கடந்த நான்கு நாட்களாக இறக்கம் கண்டுவந்த தங்கத்தின் விலை தொடர்ந்து 2 நாட்களாக உயர்ந்து வருவது நுகர்வோரை கவலையடைய செய்துள்ளது.

சென்னையில் இன்று (20. 01. 2024)  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. நேற்று ரூ.46,480க்கு விற்பனை ஆன ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.46,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.5,825ஆக உள்ளது. மேலும், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.77ஆக உள்ளது.

காலையிலேயே தஞ்சாவூர் அருகே சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு.!

சென்னையில் நேற்றைய தினம் (19 01. 2024) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து,  சவரனுக்கு ரூ.46,480 என்று விற்பனை செய்யப்பட்டது. கிராம் ஒன்றுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,810க்கும் விற்பனை ஆனாது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.