தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு..!

இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.36,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது, கிராமிற்கு ரூ.70 உயர்ந்து , ரூ.4,535-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை தினம் தினம் குறைந்து மற்றும் உயர்ந்துகொண்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.36,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது, கிராமிற்கு ரூ.70 உயர்ந்து , ரூ.4,535-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதைபோல் சென்னையில் வெள்ளியின் விலை கிராமிற்கு 1.60 காசுகள் உயர்ந்து ரூ.75.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.