தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு.!

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.35720-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றத்தை சந்தித்த வண்ணம் தான் உள்ளது. பெண்கள் அதிகமானோர் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பலரும் உற்று கவனிப்பதுண்டு. அந்த வகையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்தது. ஆனால், இன்று சற்று உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.35,720-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.4,465- க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 10 காசு குறைந்து ரூ.66.60-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.66,600 ஆக உள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.