தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்வு.!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து சவரன் ரூ.35,728-க்கு விற்பனை.

பெண்களை பொறுத்தளவில் தங்களது பணத்தை அதிகமாக தங்கத்தில் தான் முதலீடு செய்வது உண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பலரும் உற்று கவனிப்பதுண்டு. அதைபோல் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை சரிவை கண்டு வந்தது. ஆனால் இன்று சற்று உயர்ந்துள்ளது.

அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து சவரன் ரூ.35,728-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு  ரூ.4,466-க்கு விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.67.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.