தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு.!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.35,664க்கு விற்பனை

தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றத்தை சந்தித்த வண்ணம் தான் உள்ளது. பெண்கள் அதிகமானோர் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பலரும் உற்று கவனிப்பதுண்டு. அந்த வகையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.35,664 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,458க்கு விற்பனை. வெள்ளி விலை எந்த மாற்றமுமில்லாமல் கிராம் வெள்ளி ரூ.68.60க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.68,600க்கும் விற்பனையாகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.