43,000 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை..!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.368 உயர்ந்து ரூ.43,360க்கு விற்பனை.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை கடந்த ஜூன் மாதத்திலிருந்து குறையாமல் உயர்ந்து கொண்டேதான் வருகிறது, மேலும் கடந்த 1ம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.41,568க்கும், 3ம் தேதி ரூ.41,592க்கும், 4ம் தேதி ரூ.41,616க்கும் விற்கப்பட்டது. மேலும் இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.5,324க்கும், சவரன் ரூ.42,592க்கும் விற்றது. இந்த விலை தங்க விலை வரலாற்றில் மிக அதிகப்பட்ச விலை என்ற சாதனையையும் படைத்தது.

அந்த வகையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.368 உயர்ந்து ரூ.43,360க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை 43 ரூபாய் உயர்ந்து 5,420 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 2.20 அதிகரித்து 83.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.