நண்பர்களுக்கு இடையே, இருநாட்டு தேசிய தினங்களும் பகிரப்படுவதில் மகிழ்ச்சி – பிரதமர் ஸ்காட் மோரிசன்

ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசு தினமும் கொண்டாடப்படுவது தற்செயலாக நிகழ்ந்த அதிசயம் – பிரதமர் ஸ்காட் மோரிசன்

இன்று இந்தியாவில் 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றினார். குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், இந்தியாவில் இன்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஆஸ்திரேலியாவில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசு தினமும் கொண்டாடப்படுவது தற்செயலாக நிகழ்ந்த அதிசயம்.

தேசிய நாள் மட்டுமல்லாமல், ஜனநாயகம், சுதந்திரம், பன்முகத்தன்மை என அனைத்தையும் இந்தியா – ஆஸ்திரேலியா பகிர்ந்துள்னன. நண்பர்களுக்கு இடையே, இருநாட்டு தேசிய தினங்களும் பகிரப்படுவதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்