சிம்புவுக்கு வில்லனாகும் கெளதம் மேனன்… படம் மிரட்டலா இருக்கும் போல..!

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகவுள்ள ‘பத்து தல ” திரைப்படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் நார்தன் இயக்கத்தில், சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடிப்பில் உருவாகி கடந்த 2017-ம் ஆண்டு ஹிட்டடித்த திரைப்படம் மஃப்டி. தற்போது இந்த படத்தை ‘பத்து தல “எனும் பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது . ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்தப் படத்தினை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய வெற்றி படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார் .

இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். அதிலும் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என்று தகவல்கள் வெளியானதை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் வில்லனாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இயக்குனர் கிருஷ்ணா இயக்குனர் கெளதம் மேனனுடன் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.