விநாயகர் சிலை செய்யும் கடைகளுக்கு சீல் வைப்பு.!

காஞ்சிபுரம் அய்யம்பேட்டையில் விநாயகர் சிலை செய்யும் கடைகளுக்கு வட்டாட்சியர் சீல் வைப்பு.

வருகிற 22-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலம் நடத்தவும், நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கவும் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தடையை மீறி விநாயகர் சிலை வைப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காஞ்சிபுரம் அய்யம்பேட்டையில் விநாயகர் சிலை செய்யும் கடைகளுக்கு வட்டாட்சியர் சீல் வைத்தார். சீல் வைத்ததை கண்டித்து வாலாஜாபாத் வட்டாட்சியர் வாகனத்தை முற்றுகையிட்டு சிலை செய்பவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்