பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் விவகாரம் – மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்வது தொடர்பாக   பதில் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சாத்தான்குளத்தை சேர்ந்த  ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சிறையில் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வந்தது.இதனிடையே தூத்துக்குடியை சேர்ந்த அதிசய குமார் என்பர் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார்.அதில் , பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

 எனவே தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் பிரண்ட்ஸ் ஆஃப்  போலீசை சேர்ந்தவரிடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டது.இந்நிலையில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் காவல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பா? என்று வமனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.மேலும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்வது தொடர்பாக  தமிழக டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் 4 வாரத்தில் பதில் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.