இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் நவம்பர் வரை நீட்டிப்பு..!

நவம்பர் மாதம் வரை இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை நீட்டிப்பதாக மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11 மணியளவில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், கொரோனா 3 ஆவது அலை பற்றிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் கொரோனா தடுப்பு பணிகள் பற்றியும் கலந்தாலோசித்தனர்.

அப்போது பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் தேசிய உணவு பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு மாதம் 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை ஜூலை முதல் நவம்பர் வரை நீட்டிக்க இந்த மந்திரிசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.