நேற்று காலையிருந்து 4 முறை அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் துப்பாக்கி சூடு – 4 பேர் கொலை!

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நேற்று காலையில் இருந்து நான்கு முறை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் சின்சினாட்டி எனும் நகரில் நேற்று காலை முதல் நான்கு வெவ்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. முதலில்  வால்நட் ஹில்ஸ் என்ற இடத்தில் மர்ம நபர்கள் பதுங்கி இருந்த படி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். இரண்டாவதாக சால்ஃபோன்ட் பிளேஸ் என்னுமிடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அன்டோனியா பிளேர் என்ற கறுப்பினத்தைச் சேர்ந்த இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மூன்றாவதாக ஈஸ்ட் மெக்மிகன் அவென்யூ பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். வெஸ்ட் என்ட் என்ற இடத்தில் நான்காவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது, இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்து நடந்த வன்முறை சம்பவங்களால் சின்சினாட்டி பகுதி மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். நான்கு இடத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூடும் தனித்தனியாக நடந்தவை என்பதால், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Rebekal