தாய்லாந்து, மியான்மரில் இருந்து பீகாருக்கு வந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

பீகாரில், கயாவில் உள்ள விமான நிலையத்தில் கொரோனா சோதனை செய்ததில் நான்கு வெளிநாட்டினருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரில், சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு கண்டிப்பாக கொரோனா பரிசோதனை எடுக்கபட்டு வருகிறது

அதன்படி, பீகாரில், கயாவில் உள்ள விமான நிலையத்தில் சோதனை செய்ததில் நான்கு வெளிநாட்டினருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர்கள் தனியார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தாய்லாந்து மற்றும் மியான்மர் நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment