#BREAKING: மலேசியா முன்னாள் பிரதமருக்கு நஜிப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறை.!

மலேசியாவின் முன்னாள் பிரதமர்நஜிப் ரசாக் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்துள்ளார். இவர் பதவி காலத்தில் அரசு நிதியை தனது சொந்த கணக்கிற்கு மாற்றி ஊழல் செய்ததாக குற்றம் கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக அவர்மீது 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ஊழல், நம்பிக்கை மோசடி, சட்டவிரோத பண பரிவர்த்தனை, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகளில் நஜிப் ரசாக் குற்றவாளி என கூறப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பளிக்க உள்ளதாக கூறப்பட்டது.

அதன்படி, நஜிப் ரசாக்கிற்கு மலேசிய நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காக அவருக்கு 49.40 மில்லியன் டாலர் அபராதமும் விதித்தது அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

author avatar
murugan