முன்னாள் திமுக எம்பி மஸ்தான் கொலை வழக்கு – ஓட்டுநர் மனு தள்ளுபடி!

மஸ்தான் மரணம் தொடர்ப விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால் ஜாமீன் தர காவல்துறை எதிர்ப்பு.

முன்னாள் திமுக எம்பி மஸ்தான் கொலை வழக்கில் ஓட்டுநரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். மஸ்தான் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார் ஓட்டுநர் இம்ரான் பாஷா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். திமுக முன்னாள் எம்பி மஸ்தான் கடந்தாண்டு டிசம்பர் 22-ம் தேதி கூடுவாஞ்சேரி அருகே மர்மமான முறையில் உயிரிழந்தார்.

மஸ்தானின் மகன் அளித்த புகாரில் போலீஸ் விசாரணை நடத்தியதில் அவர் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மஸ்தான் கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டதை அடுத்து கார் ஓட்டுநர் உள்பட 6 பேரை கைது செய்தது போலீஸ்.

மஸ்தான் கொலை தொடர்பான விசாரணை ஆரம்பகட்ட நிலையில், இருப்பதால் ஜாமீன் வழங்க கூடாது என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தது. அரசு தரப்பின் எதிர்ப்பை அடுத்து கார் ஓட்டுநர் இம்ரான் பாஷாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment