இமாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் காலமானார்…!

இமாசலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவருமான வீரபத்ர சிங் காலமானார். 

இமாசலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவருமான வீரபத்ர சிங் (84) கடந்த 2 மாதங்களில் இரண்டு முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையில் தோய்வு ஏற்பட்டது.

இதனை அடுத்து கடந்த திங்கட்கிழமை மாரடைப்பு காரணமாக இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வீரபத்ர சிங் அவர்கள், ஒன்பது முறை எம்.எல்.ஏவாகவும், ஐந்து முறை எம்.பியாகவும், 6 முறை இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.