உருகிய நிலையில் இருக்கும் உணவுப் பொருட்கள் – சுத்தியால் அடித்தும் உடைக்க முடியவில்லை.

நாட்டின் வட கடைசியில் இருக்கும் சியாச்சின் மலைத்தொடரில் இருக்கும் கடுமையான குளிரால் குளிர் பானங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் அனைத்தும் உறைந்து விடுவதாகவும் அதை உடைத்தால் உடையவில்லை என்று அங்கு பாதுகாப்புப் பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
கடல் மட்டத்தில் இருந்து 20,000 அடி உயரத்தில் உயரத்தில் இருக்கும் சியாச்சின் மலைத்தொடரில் முகம் அமைத்துள்ள ராணுவ வீரர்கள் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி உள்ளது. அதில், பாக்கெட்டில் இருக்கும் பழச்சாறு உறைந்து செங்கல் போன்று காட்சி அளிக்கிறது அதனை சுத்தியல் மூலம் அடிக்க முயற்சித்தும் அது எளிதில் உடையவில்லை. இதே போல், காய்கறிகள் ,பழங்கள் அனைத்தும் உடையாமல் இருப்பது அந்த வீடியோவில் தெரிகிறது.
இந்த பகுதியில் குளிரானது மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.