கொரோனாவை உறுதி செய்ய பி.சி.ஆர் கருவியை பின்பற்றுங்கள் – ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்

கொரோனாவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.

கொரோனா வைரஸை உறுதி செய்ய பி.சி.ஆர் டெஸ்ட் முறையையே பின்பற்ற மாநில அரசுகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேபிட் டெஸ்ட் முறையில் மாறுபட்ட முடிவுகள் வெளியான நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கமளித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவருக்கு ANTIBODY எனப்படும் பிறபொருளெதிரி உருவாவதை கண்டறியவே ரேபிட் டெஸ்ட் முறை பயன்படுத்தப்படுகிறது என்று கூறியுள்ளது.

இந்நிலையில் கொரோனாவை கண்டறிய மட்டுமே மாநில அரசுகள் ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவை உறுதி செய்ய பி.சி.ஆர் டெஸ்ட் அவசியம் என்றும் ரேப்பிட் டெஸ்ட் கிட் தவறான முடிவுகளை காட்டுவதாக சில மாநிலங்களில் புகார் எழுந்த நிலையில், 2 நாட்களுக்கு ரேபிட் டெஸ்ட் பரிசோதனையை நிறுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் கொரோனாவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்