கனமழை எதிரொலி… தத்தளிக்கும் கர்நாடகா… மீட்பு பணிகள் முடுக்குவிப்பு…

நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் தற்போது கொட்டித் தீர்க்கும் கனமழையால் மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பிவழிகின்றன. இதையடுத்து அணைகள் திறப்பால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் 31 மீட்பு முகாம் அமைத்து மீட்பு.

அம்மாநிலத்தின் முக்கிய ஆறுகளான காவேரி, ஹேமாவதி, கபிலா, ஹாரங்கி போன்ற ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் செல்வதால், அவற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.  கிருஷ்ண ராஜ சாகர் அணையிலிருந்து 40,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வடக்கு கர்நாடகா மற்றும் மத்திய கர்நாடகாவில் உள்ள பத்ரா, துங்கபத்ரால காடாபிரபா, மலபிரபா அல்மாட்டி அணைகளும் நிரம்பி உள்ளதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன. மேலும் உடுப்பி மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக தேசிய பேரிடர் குழு  பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி அறிவுறுத்தி வருகின்றனர். மேலும்,  உடுப்பி நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதேபோல் அம்மாவட்டத்தில் ஸ்வர்ணா, சீதாநதி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

author avatar
Kaliraj