வெந்நீரில் உப்பு கலந்து இரவில் பயன்படுத்துவதால் வரும் நன்மைகள் தெரியுமா?

வெந்நீரில் உப்பு கலந்து இரவில் பயன்படுத்துவதால் வரும் நன்மைகள் பல உள்ளன. அவைகள் என்னவென்று பார்க்கலாம் வாருங்கள்.

உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரை தொடர்ந்து ஒரு வாரம் குடித்து வந்தால் செரிமான கோளாறுகள் நீங்கி செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படும். அடிக்கடி ஏற்படக்கூடிய செரிமான கோளாறுகள் மலச்சிக்கல் ஆகியவற்றை சரி செய்யும். உணவு உண்ணும் போது உடலுக்குத் தேவையான ஆற்றலை வளர்சிதைமாற்ற முறையில் நீர் கலந்த உப்பு பருகுவதால் கிடைக்கும். அதிக உழைப்பிற்குப் பிறகு இரவில் உப்பு நீரை குடிக்கும் பொழுது மனதை அமைதி அடையச் செய்வதோடு நரம்பு மண்டலங்களையும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கிறது.

இரவு நேரங்களில் குடிக்கக்கூடிய உப்பு தண்ணீர் மனதில் உள்ள அழுத்தத்தைக் குறைத்து ஆழ்ந்த தூக்கத்தை உருவாக்குகிறது. உடல் வலி மற்றும் அழற்சி சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளையும் நீக்குகிறது. மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளித்து நோய் உள்ளவர்களை குணப்படுத்துகிறது. தொடர்ச்சியாக இந்த உப்பு நீரை குடித்து வரும்போது ஆரோக்கியத்தை பராமரிக்கவும் சர்மத்தை பிரகாசமாகவும் இளமையாகவும் வைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள அதிகப்படியான கனிமச்சத்துக்கள் எலும்புகளை வலுவாக்கி மேம்படுத்த உதவுவதோடு எலும்புகளை அடர்த்தியாக்கி முதுமை காலத்தில் தேவையான சத்துக்களை வழங்குகிறது. உடல் வறட்சி அடையாமல் இருக்க உதவி செய்கிறது

author avatar
Rebekal