சுருக்குமடி வலை விவகாரம்.., குடும்ப அட்டை, வாக்காளர் அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் மீனவர்கள்..!

மயிலாடுதுறையில் போராட்டத்தில் ஈடுப்படும் மீனவர்கள் தங்களது ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

தமிழக அரசு மற்றும் உயர்நீதிமன்றம் கடல் வளத்தை பாதுகாக்க சுருக்குமடி வலை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதனால், மயிலாடுதுறை மாவட்டத்தில் 13 மீனவ கிராமங்கள் சுருக்குமடி வலையை ஆதரித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 17-ஆம் தேதி முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மீனவர்கள் 2-வது நாளான நேற்று திருமுல்லைவாசல் கடலில் இறங்கி போராட்டம்  நடத்தினர். இதில், ஆண்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டார். அப்போது மீனவர்களிடம் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மீண்டும் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து போராட்டத்தை இரவு வரை தொடர்ந்தனர்.

நேற்று இரவு பூம்புகாரில் திருமுல்லைவாசல், மடவா மேடு, சந்திரபாடி பகுதி மீனவர் பிரதிநிதிகள் ஒன்றுகூடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இதனால் இன்று 3-வது நாள் போராட்டத்தை மீனவர்கள் தொடர்கின்றனர்.

போராட்டத்தில் ஈடுப்படும் மீனவர்கள் நடைபயணமாக  சீர்காழி சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அங்கு தங்களது ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

author avatar
murugan