ஆப்பிரிக்காவுக்கு வெளியே குரங்கு அம்மையால் ஏற்பட்ட முதல் மரணம்

ஆப்பிரிக்காவுக்கு அடுத்து பிரேசிலில் குரங்கு அம்மையால் ஏற்பட்ட முதல் மரணம் பதிவாகியுள்ளது.

பிரேசிலில் 41 வயதான ஒருவர் குரங்கு அம்மையால் உயிரிழந்துள்ளார். ஆப்பிரிக்காவிற்கு வெளியே நோயால் இறந்த முதல் நபர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரேசிலின் சுகாதார அமைச்சகம் கூறுகையில், குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட 3,750 நோயாளிகளில், 120பேர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் நேற்று(ஜூலை 29) இறந்துவிட்டதாக கூறினர்.

author avatar
Varathalakshmi

Leave a Comment