டெல்லி பிறந்தநாள் விழாவில் துப்பாக்கி சூடு..! ஒருவரது முகத்தில் பாய்ந்த குண்டு..!

டெல்லியில் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட 37 வயது நபர் முகத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

தலைநகர் டெல்லியில் ஜோனாபூர் கிராமத்தில் பிரமோத் எனும் 37 வயது நபர் தனது பக்கத்துவீட்டு குழந்தைகளின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளார். அங்கு பிரமோத், ரன்பால் என்பரால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். ரன்பாலால் சுடப்பட்ட தோட்டா பிரமோத் முகத்தில் தாக்கியது.

காயமடைந்த பிரமோத் டெல்லி AIIMS மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து போலீசில் பிரமோத்தின் சகோதரர் வினோத் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில் குற்றம் சாட்டப்பட்ட ரன்பால், தன்னுடன் மேலும் 7 முதல் 8 ஆண்களை அழைத்து வந்தார். அவர்கள் மொட்டை மாடிக்குச் சென்று பிரமோத் மீது 7 முதல் 8 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர்.

என் தம்பி பிரமோத் நிறுத்த சொன்னான் ஆனால் ரன்பால் மீண்டும் ஒரு முறை சுட்டான். தோட்டா என் தம்பியின் முகத்தில் தாக்கியது என்று பிரமோத்தின் சகோதரர் வினோத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment