நெய்வேலி NLC அனல்மின் நிலைய தீ விபத்து! 5 பேர் உயிரிழப்பு!

நெய்வேலி NLC அனல்மின் நிலைய தீ விபத்தில் 5 பேர் உயிரிழப்பு.

நெய்வேலி NLC அனல் மின் நிலையத்தில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.  15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் 5 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக, இதுவரைக்கும் 17 பேர் என்எல்சி பொது மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் தீ விபத்தில் சிக்கி உள்ளனர்.

author avatar
murugan