FIFA WorldCup2022: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய ரொனால்டோவின் போர்ச்சுகல்.!

ஃபிஃபா உலகக்கோப்பையில் போர்ச்சுகல் அணி, 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை தோற்கடித்து நாக் வுட்டுக்கு தகுதி பெற்றது.

கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடரின் குரூப்-H இல் இடம்பெற்ற ரொனால்டோவின் தலைமையிலான போர்ச்சுகல் மற்றும் உருகுவே அணிகள் லுஸைல் ஸ்டேடியத்தில் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை.

இரண்டாவது பாதியில் தொடங்கிய சில நிமிடங்களில் போர்ச்சுகல் அணியின் ப்ருனோ பெர்னாண்டஸ் 54ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து போர்ச்சுகல் அணியை முன்னிலை பெறச் செய்தார். 90 நிமிடங்கள் வரை உருகுவே அணி கோல் அடிக்காமல், போர்ச்சுகல் 1-0 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை முடிக்க போகும் கடைசி கட்டத்தில் பெர்னாண்டஸ் மற்றொரு கோலை அடித்தார்.

ஆட்டத்தின் கூடுதலாக வழங்கப்பட்ட 3வது நிமிடத்தில் இந்த கோலை பெர்னாண்டஸ் அடித்தார். மறுபுறம் உருகுவே அணி கோல் ஏதும் அடிக்காததால் போர்ச்சுகல் இந்த போட்டியில் 2-0 என்ற முன்னிலையில் வெற்றி பெற்று குரூப்-H இல் 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது. மேலும் 3ஆவது அணியாக அடுத்த சுற்றான நாக் அவுட்டுக்கு முன்னேறியுள்ளது.

author avatar
Muthu Kumar

Leave a Comment