FIFA WC 22:ஜப்பானை பெனால்டி ஷூட்டில் 3-1 என்று வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய குரோஷியா

ஜப்பான் மற்றும்  குரோஷியா இடையேயான நாக் அவுட் சுற்று போட்டி இன்று நடைபெற்றது.ஜப்பான் அணிக்கான  முதல் கோலை டெய்சன் மேடா 43 வது நிமிடத்தில் அடித்தார்.2018 உலகக் கோப்பை இறுதிப் போட்டியாளர்களான குரோஷியா சற்றே சுதாரித்துக்கொண்டு  55 வது நிமிடத்தில் இவான் பெரிசிச் மூலம் சமன் செய்தது.

90 நிமிடங்கள் முடிந்தும் இருமுறை கூடுதல் நேரம் கொடுத்தும் 1-1 என்று   சமனில் இருந்த ஆட்டம் பெனால்டி ஷூட்-அவுட்டு வரை சென்றது.பெனால்டி சூட்டில் குரோஷியாவின் கோல் கீப்பர் அற்புதமாக ஜப்பான் அடித்த 4 ஷூட்டில் 3 ஐ தடுத்து குரோஷியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

இறுதியில் குரோஷியா  பெனால்டி சூட்டில் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment