இன்று உலகம் முழுவதும் பெண்களுக்கான கேள்வி குறியாக தான் மாறியுள்ளது. அந்த வகையில், துருக்கியின் மென்டீஸ் பகுதியில் வசித்து வருபவர் பினார் குல்டெக் (27). இவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து குரல் கொடுத்து வருபவர். இவரை கடந்த சில நாட்களாகவே காணவில்லை.
இந்நிலையில், இவரது காதலர் இவரை எரித்து கொன்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது காதலரான செமல் மெடின் அவ்சி, சம்பவத்தன்று துண்டு துடான மாமிசங்களை எரித்து உள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த அவரது சகோதரர் மெர்ட்கன் அவ்சி கெட்ட வாடை வருகிறது என்ன காரணம் என கேட்டுள்ளார். அதற்கு அவர், அது கேட்டு போன மாமிசம் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், மாயமான பெண்ணியவாதி குறித்து நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் சந்தேகத்தின் பேரில், மெர்ட்கன் அவ்சியின் மொபைல் அழைப்புகளை கண்காணித்து, பின்னர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து, மெர்ட்கன் சம்பத்தன்று நடந்த எல்லாவற்றையும் வாக்குமூலமாக கொடுத்துள்ளார்.
அந்த வாக்குமூலத்தில், தனது சகோதரரின் மதுபான விடுதியில் உள்ள குளிர்பதனப் பெட்டி சேதமடைந்துள்ளதால், அதில் இருந்த மாமிசம் கெட்டுப்போனது தமக்கு தெரியும் என்பதால் சகோதரர் மீது சந்தேகம் எழவில்லை என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ஜூலை 21 ஆம் தேதி செமல் மெடின் அவ்சி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இந்த கொலை வழக்கு தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் துருக்கில் 27 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…