ஒரு பாவியைப் போல என்னை உணர்கிறேன் – கண்கலங்கிய மக்கள் செல்வன்.!

லாபம் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் பற்றி பேசியுள்ளார்.  

மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “லாபம்“. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் அரங்கில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் டி.இமான், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் நடிகர் விஜய் சேதுபதி மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் பற்றிபேசியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் ” இயக்குனர் ஜனநாதனின் இழந்த நிலையில் ஒரு பாவியைப் போல என்னை உணர்கிறேன். எனக்கும் அவருக்கும் உள்ள உறவு தந்தை, மகன் உறவுபோல, அவர் இருக்கும்போது அவரது அருமை புரியவில்லை. அவர் மரணம் மூலம் காலம் கேவலமானது என உணர்கிறேன்.  முன்பே தெரிந்திருந்தால் அவர்கூட நிறைய நேரம் செலவு செய்திருப்பேன். அவர் ஒரு கதையைத் தொடங்குவார், இடையிலேயே கதையில் பல மாற்றங்களைச் செய்வார். இந்தப் படத்திற்காக நான் சம்பளம் ஏதும் வாங்கவில்லை. என் அப்பா, பாட்டன் செய்த புண்ணியத்தால் இப்படத்தில் நடித்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.