கொரோனா அச்சத்தால் இளைஞனை தனிமை படுத்திய குடும்பம்- தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!

கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், பலரும் இதற்கான நடவடிக்கைகளாக தனிமைப்படுத்துதல் என்ற ஒன்றையே நம்பி உள்ளனர். அரசாங்கமும் அதைத்தான் வலியுறுத்துகிறது. இந்நிலையில் தற்பொழுது மலேசியாவில் இருந்து அண்மையில் புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞன் ஒருவர் வீடு திரும்பியிருக்கிறார்.

அந்த இளைஞனின் குடும்பத்தினர்கள் கொரோனா வந்துவிடுமோ என்ற அச்சத்தால் இளைஞனை தனிமைப் படுத்தி உள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தனிமைப்படுத்தப்பட்ட இளைஞன் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Rebekal