புற்றுநோய் பாதித்த மகனை விஷ ஊசி போட்டு கொன்ற தந்தை கைது…!

சேலத்தில் புற்றுநோய் பாதித்த மகனை விஷ ஊசி போட்டு கொன்ற தந்தை கைது.

புற்றுநோய் ஒரு ஆட்கொல்லி நோய் ஆகும். இந்த நோய்க்கு மருத்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்த நோயை குணப்படுத்துவதற்கு பெரிய அளவிலான தொகையை செலவளிக்க வேண்டி உள்ளது. இதன் காரணமாக பாமர மக்கள் பலர் மருத்துவம் மேற்கொள்ள முடியாமல் உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரின் 14 வயது மகனுக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளது. இதனால் அந்த சிறுவன் நாளுக்கு நாள் வேதனையை அனுபவித்து வந்துள்ளான். நாளுக்கு நாள் தனது மகன் துன்பத்தை அனுபவிப்பதால், பெரியசாமி மகனுக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்த்துள்ளார்.

இதனையடுத்து, 14 வயது சிறுவனை விஷ ஊசி போட்டு கொலை செய்த, சிறுவனின் தந்தை பெரியசாமி, அவரது உறவினர் பிரபு ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.