கதண்டு வண்டுகள் தாக்கி  தந்தை மகள் உயிரிழப்பு.!

நாகை மாவட்டத்தில் கதண்டு வண்டுகள் தாக்கி  தந்தை மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகைபட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே கடலங்குடி கிராமத்தில் வசித்து வந்தவர் ஆனந்தகுமார், இவர் நெல் கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சங்கரி இவர்களுக்கு  வயதுள்ள இன்சிகா மற்றும் பவித்ரா என்ற 2 மகள்கள்  உள்ளனர்.  இந்த நிலையில் தனது மகள்வுடன் வயல்வெளி பகுதியில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, அவ்வழியில் உள்ள பனைமரத்தில் கதண்டு வண்டுகள் கூடு கட்டி இருந்தது.

மேலும் அந்த கூட்டில் உள்ள வண்டுகள் அப்பகுதியில் செல்வோரை திடீரென தாக்கியது. அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற ஆனந்த் மற்றும் அவருடைய மகள் இன்சிகா வும் கடித்துள்ளது, இதில் படுகாயம் அடைந்த இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்சிகா அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் ஆனந்த்குமாரை மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார் ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும்  கதண்டு வண்டுகள் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.