வேகமாக உருகும் பனிக்கட்டிகள் ! எகிறும் கடல் நீர் மட்டம் ! எச்சரிக்கை விடுத்த ஐ.நா !

உலக தலைவர்கள் பலரும் தற்போது நிகழும் பருவ நிலை மாற்றங்களை குறித்து பேசி வருகிறார்கள்.இந்நிலையில் ஐ .நா சபை இது குறித்து ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

இந்த அறிக்கையை ஐ .நா மூலம் அமைக்க பட்ட அறிவியல் அறிஞர்கள் கொண்ட குழு பருவநிலை மாற்றம் தொடர்பான குழு இந்த அறிக்கையை சமர்பித்துள்ளது.

இந்த அறிக்கையில் பருவநிலை மாற்றத்தால்  கடல் உயிரினங்களின் அழியக்கூடும் என்றும் தெரிவிக்க பட்டுள்ளது.மேலும் கடலோர பகுதிகளில் வாழும் கோடான கோடி மக்களுக்கும் ஆபத்து என்றும் கூறியுள்ளது.வெப்பத்தின் அளவு அதிகரிப்பதால் மீன் உள்ளிட்ட உயிரினங்கள் படிப்படியாக அழிய கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளது இதனால் கடல் நீரில் உள்ள அமிலத்தில் அளவு அதிகரித்துள்ளது.

 

மேலும் உலகம் வெப்பம் அடைவதால் சக்தி வாய்ந்த புயல்கள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த பருவ நிலை மாற்றங்கள் பல மோசமான பாதிப்புகள் ஏற்படுத்தும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.