நடிகர் சூர்யாவை நேரில் சந்தித்து விவசாயிகள் பாராட்டு !

நடிகர் சூர்யா கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது “காப்பான்” படம் திரைக்கு வந்து வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யா இந்த படத்தில் விவசாயிகளின் நலனிற்காக நடிகர் சூர்யா குரல் கொடுத்ததாக கூறி  தமிழக காவிரி விவசாய சங்கத்தினர் பொது செயலாளர்  பி.ஆர் பாண்டியன்சூர்யாவை நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்து  கூறினார்.

பெரும் ஆபத்தில் இருக்கும் டெல்டா  மாவட்டங்களின் நிலையை தெளிவாக எடுத்துரைத்து , விவசாயிகளின் நலனிற்காக குரல் கொடுத்த சூர்யாவையும் ,இயக்குநர் கே.வி.ஆனந்தையும் வாழ்த்துவதாக அவர் கூறியுள்ளார்.