ஓடும் காரில் இளம் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை ..! காமக்கொடூரர்கள் அதிரடி கைது ..!

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள படர்காட் பகுதியை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் உடல்நலம் சரியில்லாத மகளை மருத்துவமனை சேர்த்துவிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு ஆட்டோ ரிக்ஷாவில் வீடு திரும்பினார்.

அந்த  ரிக்ஷாகாரன் அப்பெண்ணுக்கு தெரிந்தவர் என்பதால் வழக்கமாக செல்லும் வழியில் செல்லாமல் வேறு ஒரு வழியில் சென்று உள்ளார்.அப்போது அப்பெண் ஏன் வேற வழியில் செல்கிறீர்கள் என கேட்டதற்கு அந்த  வழியில் பிரச்சனை இருப்பதாகவும் அதனால் தான் மாற்று வழியில் செல்வதாக கூறினார்.

பின்னர் சிறுது நேரம் கழித்து அந்த ஐந்திற்கும் மேற்பட்டோர் ஏறியுள்ளனர்.அவர்கள் அப்பெண்ணின் கை கட்டியும் , வாயை பொத்தியும்  அப்பெண்ணை வேறுஒரு வாகனத்திற்கு கடத்தி உள்ளனர்.

அந்த வாகனம் நர்சிங்கார் என்ற இடத்திற்கு சென்றது.அப்போது ஓடும் வாகனத்திலே 9 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.பின்னர் அப்பெண்ணை சாலையில் வீசிவிட்டு சென்று விட்டனர்.நடுரோட்டில் மயங்கி கிடந்த அப்பெண்ணை பற்றி அங்கு இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு விரைந்து வந்த போலீசார் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சேர்த்தனர். அப்பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

author avatar
murugan