பிரபலமான ஓவியர் கொரோனா தொற்றால் காலமானார்…!

  • ஓவியங்களை தத்ரூபமாக வரையக் கூடிய புகழ்பெற்ற ஓவியர் இளையராஜா.
  • கொரோனா தொற்றால் ஓவியர் இளையராஜா காலமானார்.

கும்பகோணம் அருகே செம்பியவரம்பில் எனும் கிராமத்தை சேர்ந்த பிரபலமான ஓவியர் இளையராஜா. இவர் கடந்த வாரம் தனது அக்கா மகளின் திருமணத்துக்காக கும்பகோணத்திற்கு சென்றுள்ளார். திருமணத்திற்கு சென்ற இவர் சில நாட்களுக்குப்பின் சென்னை திரும்பியுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு உடலில் சளி போன்ற தொந்தரவுகள் காணப்பட்ட நிலையில் நண்பர்களிடம் ஊரில் குளத்தில் குளித்ததால் சளி பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார். இதனையடுத்து அவர் மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டுள்ளார். அவரது குடும்பத்தில் பலருக்கும் கொரானா தொற்று ஏற்பட்ட நிலையில், இளையராஜாவும் சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தொற்றானது நுரையீரல் முழுவதும் பரவியது. இதனையடுத்து, நேற்று நள்ளிரவு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

இளையராஜா ஒரு மிகச் சிறந்த ஓவியர். இவருடைய திராவிட பெண்கள் ஓவியங்கள் மிகவும் புகழ்பெற்றவை ஆகும். பெண்களை மிகவும் அழகாக தத்ரூபமாக வரைவதில் கை தேர்ந்தவர் ஆவார். இவரது புகைப்படங்களை பார்க்கும் போது ஓவியமா அல்லது புகைப்படமா என்று சந்தேகப்பட கூடிய அளவுக்கு தத்ரூபமாக வரையும் திறமை கொண்டவர். 2003 இல் நடைபெற்ற முதல் ஓவியக் கண்காட்சியில் இருந்து மிகுந்த கவனம் பெற்றவர். இவரது ஓவியங்கள் 2010-ம் ஆண்டு முதல் விகடன் வார இதழில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.