பேய் பிடித்திருப்பதாக கூறி இளம்பெண்ணை உயிருடன் தீயில் வாட்டிய போலி பாபா…!

தெலுங்கானாவில் பேய் பிடித்திருப்பதாக கூறி இளம்பெண்ணை உயிருடன் தீயில் வாட்டிய போலி சாமியார். 

தெலுங்கானாவில் விகாராபாத் மாவட்டம், கோகிந்தா கிராமத்தை சேர்ந்த தம்பதியின் 18 வயது மகளுக்கு உடல்நலபாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அருகில் உள்ள நாட்டு வைத்தியர் எனக்கூறப்படும் ரபீக் பாபா என்பவரிடம்  சென்றனர்.

அவர் இளம்பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பதாக  கூறியுள்ளார். அதனை தொடர்ந்து பெரியளவில் தீ வளர்த்த பாபா தனது உதவியாளர்கள் உதவியுடன், இளம்பெண்ணின் கை மற்றும் கால்களை தீயில்  வாட்டியுள்ளனர். இதனால் கதறி துடித்த பெண் தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, காவல்துறையினர் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், போலி சாமியாரை தேடி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment