2 நாள் பயணமாக மியான்மர் நாட்டுக்கு நேற்று சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.
மியான்மர் தலைநகர் நே பை தா சென்றடைந்த சுஷ்மா சுவராஜுக்கு, மியான்மருக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி, மியான்மர் வெளியுறவு கொள்கை மந்திரி உ மியிண்ட் து உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், மியான்மர் அதிபர் வின் மிண்டை வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சந்தித்தார். இதனையடுத்து இன்று மியான்மர் தலைநகர் நே பை தாவில் இந்தியா மற்றும் மியான்மர் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
மேலும், மியான்மர் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி, மூத்த ஜெனரல் மன் ஆங் ஹிலிங் நயா பை டோவை சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.