தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களுக்கு தடை நீட்டிப்பு..!

தமிழகத்தில் மறுஉத்தரவு வரும்வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கு தடை நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு நேற்று வெளியிட்ட விதிமுறைகளின் படி, சில தளர்வுகளுடன் தமிழக அரசு, தமிழகத்தில் ஜூன் 30 வரையில் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. பொது போக்குவரத்து, உணவகங்கள் என பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.  மேலும், இதுகுறித்த விரிவான அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

அதில், மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களுக்கு தடை நீடிக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.