பரபரப்பு : உச்சநீதிமன்ற வளாகத்தில் தீ விபத்து…!

உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள, வங்கி கிளையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தலைநகர் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில், வங்கி கிளை ஒன்று உள்ளது. அந்த வங்கி கிளையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வங்கியில் இருந்து காலை 9 மணியளவில் கரும்புகை கிளம்பியுள்ளது.

இதனையடுத்து, தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்த தீ விபத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment