கடத்தல் வழக்கில் மெக்சிகோவின் முன்னாள் மேயருக்கு 92 ஆண்டுகள் சிறைத்தண்டனை

கடத்தல் வழக்கில் தொடர்புடைய மெக்சிகோவின் முன்னாள் மேயருக்கு 92 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஆறு சமூக தலைவர்களை கடத்திய வழக்கில், மெக்சிகோவின் முன்னாள் மேயருக்கு 92 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 62 வயதான ஜோஸ் லூயிஸ் அபார்கா, மெக்ஸிகோவின் தெற்கு மாநிலமான குரேரோவில் உள்ள இகுவாலா நகரில் ஆறு முக்கிய நபர்களை கடத்தியதற்காக அவருக்கு சிறைத்தண்டனை மற்றும் 920,700 பெசோக்கள் (சுமார் 52,000டாலர்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட நபர்களில் ஆர்டுரோ ஹெர்னாண்டஸ் கார்டோனா என்ற விவசாயத் தலைவர் ஒருவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 2014 இல் அபார்கா இகுவாலா மேயராக இருந்தபோது 43 மாணவர்கள் மேலும் காணாமல் போயுள்ளனர். அந்த ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு மத்திய மெக்சிகோவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Muthu Kumar