12 முதல் 17 வயதிலான குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்த ஐரோப்பிய மருந்துகள் கண்காணிப்புக் குழு அனுமதி அளித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக பல நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் கடந்த மே மாதம் 12 முதல் 15 வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி எடுத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது 12 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு மாடர்னாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்படுத்த ஐரோப்பிய மருந்துகள் கண்காணிப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக ஐரோப்பிய மருத்துவ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’18 வயதுக்கு மேலானவர்களுக்கு போடப்படும் ஸ்பைக்வாக்ஸ் தடுப்பூசி 12 முதல் 17 வயதிலான குழந்தைகளுக்கு போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 12 முதல் 17 வயதிலான 3,732 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் போது வெளியாகும் அதே அளவிலான நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைகளிடமும் காணப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ilaiyaraaja : அனுமதியின்றி பாடலை பயன்படுத்தியதாக 'கூலி' பட தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…
Hindu Marriage : இந்து மத சடங்குகளோடு திருமணம் செய்யப்படாவிட்டால் அந்த திருமணம் இந்து முறைப்படி செல்லாது என உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. உத்திரப் பிரதேச தம்பதியினர்…
Gold Price: மே மாதத்தின் தொடக்க நாளான இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…
Rohit Sharma : பிறந்தநாளக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் ராசி இல்லை என அவரது ரசிகர்கள் கவலையில் இருந்து வருகின்றனர். இந்திய அணியின் கேப்டனும், மும்பை அணியின் முன்னாள்…
Ajith Kumar : இன்று அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அவருடைய மனைவி ஷாலினி பெரிய கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான…