டி-20யில் இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வி; தொடரை வென்ற வங்கதேச அணி .!

வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வென்றுள்ள நிலையில் டி-20 தொடரில் 2-0 என்ற கணக்கில் வங்கதேச அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது.

தாக்காவில் நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பந்துவீசியது. இதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டக்கெட் 28 ரன்களும், சால்ட் 25 ரன்களும் குவித்தனர். வங்கதேச அணியில் மெஹதி ஹசன் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

118 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 120 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நஜ்முல் ஹொசைன் ஆட்டமிழக்காமல் 46* ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். மெஹதி ஹசன், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த தோல்வியின் மூலம் 2022 டி-20 உலகக்கோப்பை சாம்பியன் ஆன  இங்கிலாந்து அணி, வங்கதேச அணியிடம் டி-20 தொடரை இழந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

author avatar
Muthu Kumar

Leave a Comment