யானைக்கு 24 மணி நேரமும் ராணுவ பாதுகாப்பு !

இலங்கை நாட்டில் உள்ள கண்டி எனும் இடத்தில்  புகழ் பெற்ற புத்தர் கோவில் உள்ளது.அந்த கோவிலில் ஆண்டு தோறும் ஒவ்வொரு ஆகஸ்ட் மாதமும்  எசல பெரஹெரா எனும் திருவிழா 10 நாட்கள் மிகவும் சிறப்பாக கொண்டாட படுகிறது.

இந்நிலையில் இந்த திருவிழாவின் போது புத்தரின் கோயிலில் உள்ள புதிய பொருட்களை பாதயாத்திரையாக எடுத்து செல்லும் எசல ஊர்வலம் நடக்கும்.

இந்த ஊர்வலம் 90 கீ.மீ நடைபெறும்.இந்த ஊர்வலத்தில்  100 யானைகள் காலத்து கொள்ளும்.இந்நிலையில் இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் நடுங்கமுவா ராஜா என்னும்  யானை மிகவும் கௌரவமாக நடத்த படுகிறது.

இதற்கு காரணம் என்ன வென்றால் இந்த யானை கடந்த 2015 ஆம்  ஆண்டு இந்த விழாவில் கலந்து  கொண்ட போது ஒரு இரு சக்கர வாகனம் மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்திற்கு பிறகு நடுங்கமுவா ராஜாவை 24 மணி நேரமும் கவனமாக பார்த்து கொள்வதற்காக இராணுவ பாதுகாப்பு போடப்பட்டது.

எனவே இந்த யானை இராணுவத்தால் பாதுகாக்கப்படும் யானை எனும் பெருமைக்குரியது.