இன்று ஓயும் பிரச்சாரம்… 6 மணிக்கு மேல் பின்பற்ற வேண்டிய தேர்தல் விதிமுறைகள்!

Election2024: தேர்தல் விதிகளைம் மீறுவோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாளை மறுநாள் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளிலும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதன்படி நாளை மறுநாள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம். மக்களவை தேர்தலை முன்னிட்டு கடந்த சில வாரங்களாக அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் இன்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறன்றனர். எனவே இன்று மாலை பிரச்சாரம் நிறைவு பெறுவதால் அதன்பிறகு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அதன்படி இன்று மாலை 6 மணிக்கு மேல் எந்த வகையிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது. ஊடகங்கள், பேஸ்புக், வாட்ஸ் ஆப், எக்ஸ் வலைதளம் போன்ற சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் செய்ய கூடாது. அதேசமயம் பிரச்சாரம் ஓய்ந்த பிறகு வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். ஓட்டல்கள், விடுதிகளில் வெளியூர் நபர்கள் இல்லை என்பர் நிர்வாகம் உறுதி செய்யவேண்டும்.

மேலும் இன்று மணிக்கு மேல் தேர்தல் தொடர்பான கூட்டம், ஊர்வலம் நடத்தவோ, அதில் வேட்பாளர் பங்கேற்கவோ கூடாது என்றும் இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்